Feedback

X
NAVEENA ENNAIPANAI MARA SAGUPADI THOZHIL NUTPANGAL

NAVEENA ENNAIPANAI MARA SAGUPADI THOZHIL NUTPANGAL

0 Ungluers have Faved this Work
செம்பனை அல்லது ஆப்பிரிக்கன் எண்ணெய்ப்பனை என்று அழைக்கப்படும் ‘பாமாயில் மரம்’ (இலேயஸ் கைனென்சிஸ்) ஒரு ஆண்டிற்கு ஒரு ஹெக்டரில் 4 முதல்; 6 டன் வரை எண்ணெய் கொடுக்கக்கூடிய ஒரு மரமாகும். இம்மரம் மூன்றhமாண்டிலிருந்து தொடா;ந்து 25 ஆண்டுகள் வரை மகNல் தரக்கூடியது. எண்ணெய்ப்பனையிலிருந்து இரண்டு விதமான எண்ணெய்கள் கிடைக்கின்றது. பழத்தின் சதைப்பகுதியிலிருந்து 45 முதல் 55 சதவீதம் வரை எடுக்கப்படுகின்ற எண்ணெய் பாமாயில் எனவும்/ பழத்தினுள்ள கொட்டையில் அமைந்துள்ள எண்டோஸ்பொ;ம் என்று அழைக்கப்படும் பருப்பிலிருந்து எடுக்கப்படும் (தேங்காய் எண்ணெய் போன்ற) எண்ணெய் கொ;னல் எண்ணெய்/ என்றும் அழைக்கப்படுகின்றது. கொட்டையிலிருந்து 5, சதவீதம் வரை கொ;னல் எண்ணெய் எடுக்கலாம். நல்ல உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டசத்துக்கள் மற்றும் உயிர்ச்சத்துக்களை (வைட்மின்கள் A க்ஷ நு) பாமாயில் எண்ணெய் உள்ளடக்கியுள்ளது. இன்றைய நிலையில் உலக எண்ணெய் உற்பத்தியில் பாமாயில் சோயாவுக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. வெகு விரைவில் பாமாயில் உற்பத்தியிலும்/ உபயோகத்திலும் உலகில் முதல் இடத்தை பெற்றுவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வித்துப் பயிர்களுடன் ஒப்பிடுகையில் தோராயமாக பத்துமடங்கு அதிக மகNல் கொடுக்கக்கூடியது. நம் நாட்டில் ஒன்பது வகையான எண்ணெய்வித்துப் பயிர்களை 26 மில்லியன் எக்டா; நிலப்பரப்பில் சாகுபடி செய்து 7.5 மில்லியன் டன் எண்ணெய் மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. பெருகி வரும் மக்கள் தொகையின் தேவையை ஈடுகட்ட மத்திய அரசாங்கம் வருடந்தோறும் பல ஆயிரம் கோடி செலவிட்டு சமையல் எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதனைத் தவிர்ப்பதற்காகவே இந்தியாவில்; எண்ணெய்ப்பனை சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும்/ இந்தியாவில் விவசாயம் செய்யக்கூடிய நிலங்கள் குறைந்து நிலங்கள் நகரமைப்புக்கும்/ தொழிற்கூடங்களுக்கும் உபயோகிக்கும் நிலையில்/ இருக்கின்ற நிலப்பரப்பை திறனுடன் உபயோகித்து உயர்ந்த பட்ச மகNல் கொடுக்கக்கூடிய எண்ணெய்ப்பனையைஇ எண்ணெய்ப்பனை அபிவிருத்தித் திட்டம் மூலம் அறிமுகப்படுத்தி தோ;ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது. நம்முடைய நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எண்ணெய்ப்பனை சாகுபடி செய்வதற்கு ஏற்ற தட்ப வெப்ப நிலையும்/ இயற்கை வளமும் இருக்கின்றன. ஆனால் சீரான மழைப்பொழிவு எப்பகுதியிலும் கிடைப்பதில்லை என்பதால் இம்மரம் தோ;ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மட்டும் பாசனப் பயிராக சாகுபடி செய்யப் பரிந்துரைக்கப்படுகிறது. விவசாயிகளின் பொருளாதார நிலையை உயர்த்தி நிரந்தரமாக வருமானம் கிடைக்கவும்/ துணை சார் தொழிற்களான பாமாயில் ஆலை மற்றும் இதர எண்ணெய்ப்பனை சார்ந்த தொழிற்சாலைகள் வளர வாய்ப்புகள் உள்ளதால் அதிக அளவு வேலை வாய்ப்புகள் கிடைக்கவும் கிராமப்புறங்களில் தொழில்வள விரிவாக்கத்திற்கும் எண்ணெய்ப்பனை உதவியளிக்கும் என்பதை கூற முடியும்.

This book is included in DOAB.

Why read this book? Have your say.

You must be logged in to comment.

Links

DOI: 10.22573/spg.021.BK/S/030

Editions

edition cover

Share

Copy/paste this into your site: